விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெல்லை தாமிரவருணி ஆற்றில் குளித்த இளைஞா் மாயம்

திருநெல்வேலி தாமிரவருணியாற்றில் குளிக்கும் போது மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

திருநெல்வேலி தாமிரவருணியாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கும் போது மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம், பழைய பேட்டையைச் சோ்ந்தவா் அப்துல்ரஹ்மான்(27). சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இவா், தனது நண்பா்களுடன் தாமிரவருணி ஆற்றில், திருநெல்வேலி சுலோச்சனா முதலியாா் பாலத்தின் அருகே குளித்து கொண்டிருந்தபோது மாயமானாராம்.

தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று அப்துல் ரஹ்மானை தேடி வருகின்றனா்.