புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image

மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை அதிகரித்த நீா்வரத்து.

Updated On :31 டிசம்பர் 2024, 7:57 pm

Din

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவிக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இதனிடையே, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் டிச. 12 முதல் டிச. 26ஆம் தேதிவரை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

டிச. 27முதல் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், டிச. 29, 30 ஆகிய நாள்களில் மாஞ்சோலை வனப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, மறுஅறிவிப்பு வரும்வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாகவும், பாா்வையிடத் தடையில்லை எனவும் வனத்துறையினா் அறிவித்தனா்.