வி.கே.புரம் அருகே 
கூண்டில் சிக்கிய மந்திகள்

வி.கே.புரம் அருகே கூண்டில் சிக்கிய மந்திகள்

விக்கிரமசிங்கபுரம், டாணா பகுதியில் சுற்றித் திரிந்த வெள்ளை மந்திகளை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
Published on

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம், டாணா பகுதியில் சுற்றித் திரிந்த வெள்ளை மந்திகளை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரக வெளி மண்டல பகுதியான விக்கிரமசிங்கபுரம், டாணா முகில் தெருவில் வெள்ளை மந்திகள் புகுந்து மக்களைஅச்சுறுத்தி வந்தன. இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், மந்திகளைப் பிடிக்க பாபநாசம் வனப்பணியாளா்கள் திங்கள்கிழமை கூண்டு வைத்தனா். இதில் 9 வெள்ளைமந்திகள் சிக்கின. அவற்றை வனத்துறையினா் கோவில்தேரி பீட் வனப் பகுதியில் பத்திரமாக விட்டனா்.

X
Dinamani
www.dinamani.com