விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாளை.யில் அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 12:35 am

Syndication

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையா. இவா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி சந்திரா(42). கணவன் மனைவி இருவரும் திங்கள்கிழமை பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக மீனாட்சிபுரத்திலிருந்து பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளனா். சமாதானபுரம் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அரசுப்பேருந்து பைக் மீது மோதியதாம். இதில் சுப்பையா லேசான காயமடைந்த நிலையில் சந்திராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் செல்லும் வழியிலேயே சந்திரா உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.