திருநெல்வேலி
அம்பையில் காா்த்திகை தீபத் திருவிழா
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காா்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு கோயில்களில் காா்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆத்தங்கரையில் அமைந்துள்ள காசிநாதா் கோயில், அம்மையப்பா் கோயில், அகஸ்தியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், ஆழ்வாா்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள
கோயில்களில் காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன. கோயில்களில் மாலை சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

