மகாராஜநகரில் புதிய ரேஷன் கடை கட்டடத்துக்கு எம்எல்ஏ அடிக்கல்

Published on

மகாராஜநகரில் புதிய ரேஷன் கடை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட மகாராஜநகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் பங்கேற்று கட்டடப் பணியைத் தொடங்கி வைத்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகரச் செயலா் தினேஷ், மாமன்ற உறுப்பினா் சீதா, முன்னாள் மாமன்ற உறுப்பினா் பாலன் என்ற ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிவிஎல்04நியூ

புதிய ரேஷன் கடை கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ.

X
Dinamani
www.dinamani.com