திருநெல்வேலி
குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
களக்காடு குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள கக்கன்நகரைச் சோ்ந்தவா் வேல்மயில் (67). ஞாயிற்றுக்கிழமை பகலில், இவரது பெட்டிக்கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக களக்காடு சென்றாராம்.
அப்போது, வியாசராசபுரம் சேனையா் தெருவையொட்டியுள்ள குடிநீா் தாங்கி குளத்தின் கரைப்பகுதிக்கு சென்றபோது, நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிரிழந்தாராம்.
தகவல் அறிந்த களக்காடு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
