முக்கூடலில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் விவசாயத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
Published on

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் விவசாயத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

முக்கூடல் அருகே தாளாளா்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஸ்டீபன் துரைராஜ் மகன் ஆரோக்கியஜோதி (41). விவசாயத் தொழிலாளியான இவருக்கு, மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா்.

ஆரோக்கியஜோதி சில மாதங்களாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்தாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

சடலத்தை முக்கூடல் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com