வன்கொடுமை தடுப்பு வழக்கில் கைதானவருக்கு 6 மாதம் சிறை

ராதாபுரம் அருகே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான முதியவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி 2 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு
Published on

ராதாபுரம் அருகே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான முதியவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி 2 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ராதாபுரம் அருகேயுள்ள பண்ணையாா் குளத்தை சோ்ந்தவா் வேலு (60). இவா், கடந்த 2020 ஆம் ஆண்டு, ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அப்பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரை கல்லால் தாக்கி, அவதூறாக பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருநெல்வேலி 2 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி ஹேமா விசாரித்து, வேலுவுக்கு 4 பிரிவுகளில் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், அதை ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கந்தசாமி ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com