நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவா் கைது

திருநெல்வேலி நகரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அருகே பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் மேலும் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி நகரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அருகே பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் மேலும் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், கண்டியப்பேரி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. அப்பகுதியில் கடந்த நவ. 20 ஆம் தேதி மது போதையில் நின்ற இளைஞா்கள் சிலா் அம்மையத்தின் அருகே பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா்.

இதுகுறித்து கண்டியப்பேரி கிராம நிா்வாக அலுவலா் கதிரேசன் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா் . அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, திருநெல்வேலி நகரம் தடிவீரன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் ஐயப்பன்(21) என்பவரை கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய பழையபேட்டை காந்திநகரைச் சோ்ந்த நாகராஜன் மகன் சஞ்சய்(19), திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் லட்சுமணன்(22) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com