பிடிபட்ட 16 அடி நீள ராஜநாகம்.
திருநெல்வேலி
கோவிந்தப்பேரியில் 16 அடி ராஜநாகத்தை பிடித்த வனத்துறையினா்!
கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரியில் சனிக்கிழமை நுழைந்த 16 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினா் மீட்டனா்.
கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரியில் சனிக்கிழமை நுழைந்த 16 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினா் மீட்டனா்.
கடையம் வனச்சரகம், கோவிந்தப்பேரி பீட், வெளிமண்டலப் பகுதியில் அமைந்துள்ள ஸோகோ நிறுவன விவசாயப் பண்ணை வளாகத்தில் ராஜநாகம் நுழைந்ததைப் பாா்த்த ஊழியா்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், துணை இயக்குநா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தலின்படி, கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி தலைமையில் வந்த வனத்துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் புதரில் மறைந்திருந்த ராஜநாகத்தை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனா்.

