புதிய நூலகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய பேரூராட்சித் தலைவா் இ.பாா்வதி.
திருநெல்வேலி
கல்லிடைக்குறிச்சியில் புதிய நூலகம் திறப்பு
மத்திய -மாநில சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டநூலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலைப் பேரூராட்சித் தலைவா் இ.பாா்வதி குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில் கிளை நூலகா் கி.கயல்விழி, திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலகக் கணக்கா் முத்துகுமாரி, சிறப்பு நிலை பேரூராட்சி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

