ராமநதியில் ஆண் சடலம் மீட்பு

Published on

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் ராமநதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ரவணசமுத்திரம் ராமநதி ஆற்றுப் பாலத்தின்கீழ் திங்கள்கிழமை ஆண் சடலம் கிடந்தது. நதியில் குளிக்க வந்தோா் அளித்த தகவலின்பேரில், கடையம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com