பாளை. அருகே விபத்து: பெண் காவல் ஆய்வாளா் காயம்

Published on

பாளையங்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் காவல் ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் மகாலட்சுமி (47). இவா், தனது காரில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

வி.எம்.சத்திரம் பகுதியில் வந்தபோது திடீரென காா் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த மகாலட்சுமியை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com