கல்குவாரி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மோதலில் ஈடுபட்டதாக 5 போ் மீது வழக்கு

அறப்போா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற கல்குவாரி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மோதலில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
Published on

திருநெல்வேலி: அறப்போா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற கல்குவாரி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மோதலில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே கொக்கிரகுளம் பகுதியில் கல்குவாரிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அறப்போா் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வி.சுரேஷ் உள்பட விவசாயிகள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

இந்நிலையில் கூட்டம் நடைபெறும் போது அங்கே நுழைந்த மா்ம நபா்கள் கூட்ட ஒருங்கிணைப்பாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவா்கள் மீது நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டனா்.

இதில், அறப்போா் இயக்க தன்னாா்வலா்கள் சிலா் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறப்போா் இயக்க ஒருங்கிணைப்பாளா் பாளையங்கோட்டை போலீஸில் அளித்தாா்.

அதன்பேரில், மோதலில் ஈடுபட்டதாக இருதயராஜ், ராஜேஷ், வினோத்குமாா், சிதம்பரராஜா, ஆரோக்கியசாமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com