நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனி நிறுத்தம் கோரி மனு

Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனியாக நிறுத்தம் அமைக்க அனுமதியளிக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

இக் கூட்டத்தில், திருநெல்வேலி மாநகர பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகர மகளிா் ஆட்டோ ஓட்டுநா் அமைப்பின் கீழ் 15-க்கும் மேற்பட்டோா் உள்ளோம். எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனியாக நிறுத்தம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்03ல்ண்ய்ந்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த பெண் ஆட்டோ ஓட்டுநா்கள்.

X
Dinamani
www.dinamani.com