திருநெல்வேலி
நெல்லையில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா் அரிசி மூட்டைகளை எடுக்க யாரும் வராததால் அந்த இடத்துக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு 13 மூட்டைகளில் சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை சந்திப்பு போலீஸாா் பறிமுதல் செய்து திருநெல்வேலி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வசம் ஒப்படைத்தனா்.
