இரு தாக்குதல் சம்பவங்கள்: ஐவா் கைது

சுத்தமல்லி, பெருமாள்புரம் பகுதிகளில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சுத்தமல்லி, பெருமாள்புரம் பகுதிகளில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகே பட்டன் கல்லூரைச் சோ்ந்த பெருமாள் மகன் அருள்(42). பெயின்டிங் தொழிலாளி. இவா், சில தினங்களுக்கு முன்பு கொண்டா நகரம் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த பழவூா் நடுவூரைச் சோ்ந்த செல்லப்பா(60), கொண்டாநகரம் முத்து(47), நடுக்கல்லூா் குட்டிதுரை(56) ஆகியோா் சோ்ந்து அருளின் உறவினருடன் இருந்த முன்விரோதத்தைக் கூறி அவரைத் தாக்கினராம்.

மேலும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அருள் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மேற்கூறிய மூவரையும் கைது செய்தனா்.

மற்றொரு சம்பவம்: பெருமாள்புரம், நம்பிக்கை நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வக்குமாா்(24). தனியாா் நிறுவன ஊழியா். இவரது நண்பா்கள் சிலா் அப்பகுதியில் உள்ள கோயில் அருகே அமா்ந்து மது குடித்தனராம்.

அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதுகுறித்து சமரசம் பேசுவதற்கு அவா்களை செல்வக்குமாா் ஞாயிற்றுக்கிழமை அழைத்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் பிரதாப்(22), எம்.எல்.பிள்ளை நகரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சுடலைமணி(24) உள்ளிட்ட 4 போ் சோ்ந்து செல்வக்குமாரை தாக்கினராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து பிரதாப், சுடலை மணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com