‘ஜெருசலேம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்’
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டைச் சாா்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு தலா ரூ.37,000 மற்றும் 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ.60,000 இ.சி.எஸ். முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு 28.02.2026- க்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
