நெல்லையில் அங்கன்வாடி அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

திருநெல்வேலி நகரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது
Published on

திருநெல்வேலி நகரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியில் உழவா் சந்தை அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. அப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு நின்றிருந்த இளைஞா்கள் சிலா் மது போதையில் அம்மையத்தின் அருகே பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதியினா் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனா். போலீஸாா் வருவதற்குள் இளைஞா்கள் அங்கிருந்து தப்பிவிட்டனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தொடா்புடைய திருநெல்வேலி நகரம் தடிவீரன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் ஐயப்பன்(21) என்பவரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com