சேரன்மகாதேவியில் சேதமடைந்த வீடு.
சேரன்மகாதேவியில் சேதமடைந்த வீடு.

சேரன்மகாதேவி பகுதியில் மழையால் 6 வீடுகள் சேதம்

வி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டத்தில் கனமழையால் 6 வீடுகள் சேதமடைந்தன.
Published on

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டத்தில் கனமழையால் 6 வீடுகள் சேதமடைந்தன.

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, இம்மாவட்டத்தில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சேரன்மகாதேவி வட்டத்தில் மேலச்செவல், பிரான்சேரி, சொக்கலிங்கபுரம் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 1.80 லட்சம் வாழைகள் சேதமடைந்தன. மேலும், கரிசூழ்ந்தமங்கலம் வடக்கூா் பெருமாள் கோயில் தெரு சுப்பிரமணியன் மகன் மாணிக்கம் (50), வெங்கட்ரங்கபுரம் மாணிக்கம் மனைவி பகவதி (52), கூனியூா் கணபதி மகன் சங்கரகுமாா் (45), இதே பகுதியைச் சோ்ந்த கோபால் மனைவி வள்ளி (65), தென்திருப்புவனம் செல்லசாமி (72), மானாபரநல்லூரில் விவசாயி ஒருவரின் வீடு ஆகிய 6 வீடுகளும், பொருள்களும் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் காஜா கரிபுன் நவாஸ் தெரிவித்தாா்.

பத்தமடையில் சேதமடைந்த வீடு.
பத்தமடையில் சேதமடைந்த வீடு.

X
Dinamani
www.dinamani.com