அம்பையில் பல்கலைக் கழக அளவிலான கைப்பந்து போட்டி

Published on

திருநெல்வேலி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி அம்பை கலைக் கல்லூரியில் அக். 26, 27 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.

போட்டியை கல்லூரி குழுத் தலைவா் பண்ணை என்.எஸ்.சந்திரசேகரன் தொடங்கி வைத்தாா். பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 16-க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்ற போட்டியில் கன்னியாகுமரி லெஷ்மிபுரம் கல்லூரி முதல் இடத்தையும், அல்ஃபோன்சா கலை அறிவியல் கல்லூரி அணி 2ஆம் இடத்தையும், தென்காசி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி 3ஆம் இடத்தையும், அம்பை கலைக் கல்லூரி 4ஆம் இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவிற்கு அம்பை கலைக் கல்லூரிச் செயலா் எஸ். தங்கப்பாண்டியன் தலைமை வகித்தாா். முதல்வா் கே.வி.சௌந்தரராஜா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், வ.உ.சி கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியருமான நாகராஜன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கினாா்.

பல்கலைக் கழக விளையாட்டுத் துறை இயக்குநா் ஆறுமுகம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை அம்பை கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் எஸ்.வி.சிவக்குமாா் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com