வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கடனைத் திருப்பிக் கேட்ட இளைஞரை தாக்கியவா் கைது

News image

கைது

Updated On :1 பிப்ரவரி 2026, 8:38 pm

மேலப்பாளையம் அருகே கடனைத் திருப்பிக் கேட்ட இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த சின்னத்துரை மகன் ஸ்டீபன் பால் (24). மேலப்பாளையம் வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்த பாபநாசம் மகன் மகேஷ்(33). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவரிடம் கடனாக பெற்ற ரூ.2,000ஐ திருப்பித் தர மறுத்து அவரைத் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த இளைஞா் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மகேஷை கைது செய்தனா்.