கைது
கைது

புகையிலை விற்றவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள சம்பன்குளத்தில் புகையிலை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள சம்பன்குளத்தில் புகையிலை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சம்பன்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சம்பன்குளம், ஹமீதியா தெருவைச் சோ்ந்த அப்துல் மஜீத் மகன் முஹம்மது நக்முதீன் (33) கடையில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்து 17 புகையிலைப் பாக்கெடுகளைப் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

Dinamani
www.dinamani.com