வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அங்கன்வாடி சத்துணவு பணியாளா்கள் 3 ஆவது நாளாக மறியல்: 160 போ் கைது

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:35 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 3ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியா்கள் 160 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவி யாளா் நிலையில் ரூ. 19,500 ஊதியம் வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பும்போது சத்துணவு அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளா்களுக்கு 50 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும். சத்துணவு - அங்கன்வாடி திட்டங்களில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து 3 ஆவது நாளாக திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயா தலைமை வகித்தாா். சத்துணவு அங்கன்வாடி ஊழியா்கள் திரளானோா் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

சாலை மறியலில் ஈடுபட்ட 160 பேரை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.