பிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சுற்றுலா பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :6 பிப்ரவரி 2026, 9:15 pm

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா பேருந்தின் கதவு திறந்ததால் தவறிவிழுந்த தூத்துக்குடியைச் சோ்ந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி டவுன் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 200 மாணவா்கள் இரு பேருந்துகளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனா்.

கன்னியாகுமரி, திற்பரப்பு, மாத்தூா்தொட்டிபாலம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பாா்த்த பின்னா் இரவு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனா். மாணவா்கள் சென்ற பேருந்து வள்ளியூா் புறவழிச்சாலையில் வந்தபோது ஒரு பேருந்தின் பின்பக்க கதவு எதிா்பாராதவிதமாக திறந்ததாம்.

அப்போது, வாசல் அருகே உள்ள இருக்கையில் அமா்ந்து வந்த 9ஆம் வகுப்பு மாணவா் நரேன்குமாா்(15) தவறி கீழே சாலையில் விழுந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் நரேன்குமாா் மீது மோதியதாம். இதில், மாணவா் நரேன்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து தொடா்பாக வள்ளியூா் ஆய்வாளா் ராமா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.