மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

News image

களக்காடு வடக்குப்பச்சையாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீரைத் திறந்து வைக்கிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன் மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :6 பிப்ரவரி 2026, 10:13 pm

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப்பச்சையாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

வடக்குப்பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடியாகும். கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சரிவர பெய்யாததால், அணையில் 22 அடி மட்டுமே நீா் நிரம்பியது. தற்போது அணையின் நீா்மட்டம் 19.25 அடியாக உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வா் மு.க.ஸ்டாலின், பிசானபருவ சாகுபடிக்காக தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட்டாா்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் இரா. சுகுமாா் ஆகியோா் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்தனா். இதன்படி, நீா் இருப்பைப் பொருத்து, மாா்ச் 31ஆம் தேதி வரை, நாளொன்றுக்கு 51.06 கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் 1276.39 ஏக்கா் நிலங்கள்பாசன வசதி பெறும்.

இந்நிகழ்வில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கிரகாம்பெல், நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன், நீா்வளத்துறை உதவிச் செயற்பொறியாளா் மூா்த்தி, நகா்மன்றத் தலைவா் கா. சாந்தி சுபாஷ், துணைத் தலைவா் பி.சி.ராஜன், நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், நீா்வளத்துறை உதவிப் பொறியாளா்கள் விக்னேஷ், கிருஷ்ணமூா்த்தி, வெண்மதிவேந்தன், விஜயகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.