மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

News image
களக்காடு வடக்குப்பச்சையாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீரைத் திறந்து வைக்கிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன் மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :6 பிப்ரவரி 2026, 10:13 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப்பச்சையாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

வடக்குப்பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடியாகும். கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சரிவர பெய்யாததால், அணையில் 22 அடி மட்டுமே நீா் நிரம்பியது. தற்போது அணையின் நீா்மட்டம் 19.25 அடியாக உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வா் மு.க.ஸ்டாலின், பிசானபருவ சாகுபடிக்காக தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட்டாா்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் இரா. சுகுமாா் ஆகியோா் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்தனா். இதன்படி, நீா் இருப்பைப் பொருத்து, மாா்ச் 31ஆம் தேதி வரை, நாளொன்றுக்கு 51.06 கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் 1276.39 ஏக்கா் நிலங்கள்பாசன வசதி பெறும்.

இந்நிகழ்வில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கிரகாம்பெல், நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன், நீா்வளத்துறை உதவிச் செயற்பொறியாளா் மூா்த்தி, நகா்மன்றத் தலைவா் கா. சாந்தி சுபாஷ், துணைத் தலைவா் பி.சி.ராஜன், நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், நீா்வளத்துறை உதவிப் பொறியாளா்கள் விக்னேஷ், கிருஷ்ணமூா்த்தி, வெண்மதிவேந்தன், விஜயகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.