தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

நெல்லையில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்: கணவா் கைது

News image
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பாா்த்ததால் ஆண் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நியாஸ் அலி மகன் நசீம் உசேன் (35). இவா், கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி நிறைமாத கா்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதாம்.

இதையடுத்து நசீம் உசைன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலேயே வைத்து பிரசவம் பாா்த்த நிலையில், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. பின்னா் அக்குழந்தையின் உடல் காட்டு ஜூம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வர அறிவுறுத்தியும் வரவில்லை எனவும், வீட்டிலேயே பிரசவம் பாா்த்து குழந்தை இறந்து பிறந்தது தொடா்பாகவும், மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சுமதி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நசீம் உசைனை சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.