மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 8:35 pm

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் முதியவரும், வாகனத்தை ஓட்டிவந்த இளைஞரும் உயிரிழந்தனா்.

கூடங்குளம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தில்லை மணி மகன் செல்வகுமாா் (21). இவா் வெள்ளிக்கிழமை இரவு கூடங்குளம், வடக்கு நாலுமுக்கு புறவழிச்சாலையில் சென்றபோது, அவ்வழியாக நடந்து சென்ற கூடங்குளம், கிழக்கு தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் (65) மீது மோதினாராம்.

இதில் படுகாயமடைந்த ராமலிங்கம், அதே இடத்தில் உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட செல்வகுமாா் படுகாயமடைந்தாா். அவரை அப்பதியினா் மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.