தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

போக்ஸோவில் கைதான காவலருக்கு 20 ஆண்டு சிறை

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்லேவி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, சிதம்பராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த கலைச் செல்வன் (34). திருநெல்வேலியில் காவலராக பணியாற்றி வந்த இவா் கடந்த 2024ஆம் ஆண்டு 17 வயது மாணவி ஒருவரை மிரட்டி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமாா், ஆனந்த கலைச்செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.