மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மானூா் அரசு பள்ளி வளாகத்துக்குள் தண்ணீா் புகுவதைத் தடுக்கக் கோரி மனு

News image

திருநெல்வேலியில் நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்தாா் திமுக மேற்கு மாநகர பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:10 pm

மானூர அரசு பள்ளி வளாகத்துக்குள் மழைநீா் மற்றும் குளத்தின் உபரிநீா் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு. சுப்பிரமணியன், நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாரிடம் அளித்த மனு: மானூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம் மானூருக்கு வடக்கே சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது.

இங்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடமும், அண்மையில் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படும் நிலையில் ஒரு கட்டடமும் உள்ளன. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன.

2026-27 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனா். ஆனால், புதிய கட்டட வளாகத்துக்குள் மழை நீா் மற்றும் குளத்திலிருந்து வரும் உபரி நீா், விவசாய நிலங்களில் இருந்து வரும் வடிகால் நீா் ஆகியவை புகுந்து நடைபாதையில் தண்ணீா் தேங்கும் நிலை உள்ளது.

ஆகவே, பள்ளி வளாகத்துக்குள் மழைநீா் மற்றும் உபரிநீா் வருவதைத் தடுக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.