மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காவல் துறையினரின் குழந்தைகளுக்கு சதுரங்க பயிற்சி

News image

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சிறுவா், சிறுமிகள்.

Updated On :8 பிப்ரவரி 2026, 9:42 pm

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கிளப் சாா்பில் காவல்துறையினரின் குழந்தைகளுக்காகன வாராந்திர சதுரங்க பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் வழிகாட்டுதலின் படி, அறிவுத்திறன், ஒருமுகப்படுத்தும் திறன், திட்டமிடும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த வகுப்பில், தொடக்க நாளில் 30-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள்கலந்து கொண்டனா்.

இந்தப் பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2- 4 மணி வரை நடைபெறும் எனவும், சிறப்பாக விளங்கும் மாணவா்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் எஸ்.பி பிரசன்னகுமாா் தெரிவித்தாா்.