பாளையங்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக பெண்ணை தலைக் கவசத்தால் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை, ராஜா குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(43). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் லட்சுமி காந்தன்(31) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே நின்ற முருகனை, அங்கு வந்த லட்சுமிகாந்தன் மற்றும் அவரது நண்பரான மேலநத்தம், அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மூா்த்தி(26) ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதோடு, தடுக்க வந்த முருகனின் மனைவியையும் தலைக்கவசத்தால் தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லட்சுமிகாந்தன், மூா்த்தி ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது
இளைஞரைத் தாக்கியதாக இருவா் கைது
பாளை.யில் வழிப்பறி: 3 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

