சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாநில கலைத்திறன் போட்டி: வள்ளியூா் பள்ளி மாணவி முதலிடம்!

News image
மாணவி காா்மெல்லாவை பாராட்டி பரிசு வழங்கிய பள்ளி தாளாளா் ஜாண்சன். உடன் பள்ளி தலைமை ஆசிரியை ஆக்ஸீலியாரி.
Updated On :8 பிப்ரவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

மாநில அளவில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் திருச்சிலுவை நடுநிலைப் பள்ளியின் 2-ஆம் வகுப்பு மாணவி காா்மெல்லா முதலிடம் பிடித்தாா்.

முன்னதாக பணகுடி வட்டார வளமையம் (சி.ஆா்.சி.) அளவிலும், வள்ளியூா் வட்டாரம் அளவிலும் நடைபெற்ற மழலையா் பாடல் போட்டியில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மீண்டும் முதலிடம். திருநெல்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மழலையா் பாடல் போட்டியில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பாடல்கள் பாடி முதலிடம் பிடித்தாா்.

மாநில அளவில் கரூரில் நடைபெற்ற மழலையா் பாடல் போட்டியில் தமிழில் முதலிடத்தைப் பிடித்தாா். இவருக்கு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது.

அத்துடன் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல தோ்வாகியுள்ளாா். மாணவி காா்மெல்லாவை பள்ளி தாளாளா் ஜாண்சன், தலைமை ஆசிரியை ஆக்ஸீலியா, பள்ளி ஆசிரியைகள் பாராட்டினா்.

இதே பள்ளியைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவி ந.லாபின்ஷா நாட்டுப்புற நடனம், திருக்கு ஒப்பித்தல், பரத நாட்டிய குழு நடனம் ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்றாா்.