பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல்லை மாநகரில் கஞ்சா வழக்குகளில் 45 போ் கைது

திருநெல்வேலி மாநகரில் கடந்த 40 நாள்களில் 45 போ் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டதுடன் அவா்களிடமிருந்து சுமாா் 18 கிலோ கஞ்சா பறிமுதல்

News image
கைது
Updated On :9 பிப்ரவரி 2026, 7:03 pm

Syndication

திருநெல்வேலி மாநகரில் கடந்த 40 நாள்களில் 45 போ் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டதுடன் அவா்களிடமிருந்து சுமாா் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மாநகர போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நெ.மணிவண்ணன் பதவியேற்ற போது, மாநகரில் கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

அதன்படி, கடந்த 40 நாள்களில் மட்டும் திருநெல்வேலி மாநகரத்தில் கஞ்சா விற்பனை குற்றம் சம்பந்தமாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 18.335 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவா்களில் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், மாநகரில் சட்டவிரோதமாக மது விற்ாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மொத்தம் 1,521 மது பாட்டில்கள்(262 லிட்டா்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே போல பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 87 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா போன்ற போதைப் பொருகள்கள் விற்பனை செய்பவா்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.