ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பாளை.யில் சிறை கைதி உயிரிழப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:08 pm

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (78). இவா், கடந்த 2005 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் பணம் கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இவ் வழக்கில் தண்டனை பெற்ற அவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் கடந்த 2025 நவம்பா் மாதம் சுப்பிரமணியனுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைத்துறையினா் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.