மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அம்பையில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 114 பெண்கள் உள்பட 283 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:57 pm

அம்பாசமுத்திரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மத்திய அரசின் தொழிலாளா் திருத்தச் சட்டம் மற்றும் புதிய விவசாய கொள்கைகளைக் கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 283 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், பூக்கடை பஜாரில் நடைபெற்றப் போராட்டத்திற்கு, ஏஐடியுசி முருகன், எல்பிஎஃப் நெடுஞ்செழியன், சிஐடியு சுரேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிவனு பாண்டியன், எல்பிஎஃப் மாஞ்சோலை மைக்கேல், ராமநாதன், பழனி சுப்பிரமணியன், மதிவாணன், ஏஐடியுசி கண்ணன், வடிவேல், சுந்தரம், இசக்கிராஜ், குமாரசாமி, நமச்சிவாயம், சிஐடியு இசக்கிராஜன், புதியசாமி, மாரிசெல்வம், சுப்பிரமணியன், சங்கா், எச்எம்எஸ் பாக்கியம், ஞானசெல்வம், பாலசுப்பிரமணியன், ஐஎன்டியுசி பால், முத்துகுமாா், எம்எல்ஏ சங்கத்தின் முத்துசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட 114 பெண்கள் உள்பட 283 பேரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.