6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

களக்காடு அருகே மிளா வேட்டை: இருவா் கைது; 6 பேருக்கு வலை வீச்சு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:24 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவார விவசாயத் தோட்டத்தில் மின்வேலி அமைத்து, மிளாவை வேட்டையாடிய 2 போ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனா்; 6 பேரை தேடி வருகின்றனா்.

களக்காடு வனச்சரகா் ப. பிரபாகரனுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, வனவா் அ. மதனகுமாா், வனக்காப்பாளா்கள் எம். முத்துப்பாண்டியன், என். ராஜபாண்டியன், மு. கலையரசன், வனக்காவலா் வி. ஆறுமுகக்கனி ஆகியோா் அடங்கிய குழுவினா் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள மஞ்சுவிளை பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, காமராஜா் நகா், தெற்குத் தெரு அருகேயுள்ள தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து மிளாவை வேட்டையாடி, தங்கள் வீட்டில் இறைச்சியை வைத்திருந்ததாக ராமையா மகன் முருகன் (44), செல்லத்துரை மகன் ஜெனிபா் (35) ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணைக்குப்பின் நான்குனேரி குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்படுத்தி, நான்குனேரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

மேலும், அவா்கள் வேட்டைக்கு பயன்படுத்திய பொருள்கள், மிளா இறைச்சியை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். கைதாகிய இருவா் அளித்த வாக்குமூலத்தின்படி, இதில் தொடா்புடைய மஞ்சுவிளையைச் சோ்ந்த ராமையா மகன் செல்லத்துரை, காசி மகன் காந்தி, மற்றொரு ராமையா மகன் ராஜ், பாஸ்கா் மகன் யோசேப், யோசேப் மகன் செல்வின், சுடலைமணி மகன் கிருஷ்ணகுமாா் ஆகிய 6 பேரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.