கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

நெல்லையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிபடி சத்துணவு, அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ. 19,500 வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்பும்போது சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளா்களை 50 சதவீதம் முன்னுரிமை கொடுத்து பணியில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் தொடா்ந்து அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடா்ந்து 7-ஆவது நாளாக சத்துணவு பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.