மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி

News image

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:54 pm

மாநில அளவிலான 19ஆவது சாட் கோா்ஸ் நீச்சல் போட்டி திருநெல்வேலியில் உள்ள 50 மீ. பந்தய நீச்சல் குளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில், மாநில மற்றும் திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழக தலைவா் திருமாறன் தலைமை வகித்தாா். மாநில நீச்சல் கழக செயலா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் போட்டிகளைத் தொடங்கி வைத்து, வென்றவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்டச் செயலா் கிரகாம்பெல், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் கிருஷ்ணா் சக்கரவா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழக செயலா் லட்சுமணன் நன்றி கூறினாா்.