கைது
திருநெல்வேலி
சிறுமிக்கு தொல்லை: இளைஞா் கைது
திருநெல்வேலி அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள முத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் உலகநாதன் (33). இவா், திருநெல்வேலியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் வசூலிக்கும் முகவராக செயல்பட்டு வந்துள்ளாா்.
தனக்கு திருமணமானதை மறைத்து 17வயது சிறுமியுடன் பழகியதோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் உலகநாதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
