எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நெல்லையப்பா் கோயிலில் பக்தா்களுக்கு 12 மணி நேரம் உணவுப் பொருள்கள்

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தா்களுக்கு பால் வழங்குகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.. உடன் துணை மேயா் கே.ஆா்.ராஜு.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:08 pm

திருநெல்வேலியில் மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட பக்தா்களுக்கு திமுக சாா்பில் 12 மணி நேரம் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் தா்மமாக வழங்கப்பட்டன.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பக்தா்களுக்கு மிளகு பால், பாதாம் பால், சுக்கு காபி, டீ, காபி, பிஸ்கெட், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை வழங்கப்பட்டன.

இந்தப் பணியை மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா். ராஜு, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு. செல்லையா, மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, எஸ்.வி. சுரேஷ், 27 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் உலகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.