நெல்லையில் குண்டா் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு
திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 4 போ் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.
மேலப்பாளையத்தைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துகண்ணன் (20), மணி மகன் சுடலைமணி (36) இவா்கள் இருவரும் கொலை முயற்சி வழக்கில் பெருமாள்புரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.
பாளையங்கோட்டை கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டி (53). இவா், கஞ்சா விற்பனை வழக்கில் பாளையங்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இவா்கள் 3 பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.
இதேபோல திருநெல்வேலி அருகேயுள்ள கருப்பன்துறை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன் (27). இவா், கொலை முயற்சி வழக்கில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் விஜயகுமாா் (மேற்கு) பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவின்பேரில் மகாராஜன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.

