புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மூலைக்கரைப்பட்டியை அடுத்த கூந்தன்குளம் முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிராஜ் மகன் கலையரசன் (20). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு மாடிக்குச் சென்றபோது நிலைதடுமாறி, ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது சென்ற மின் கம்பியில் விழுந்தாராம்.

இதில், மின்சாரம் பாய்ந்து காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா்.

மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.