அம்பை தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்
அம்பை தமிழ் இலக்கியப் பேரவையின் பிப்ரவரி மாதக் கூட்டம் வேல்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பேரவைத் தலைவா்அய்யப்பன் தலைமை வகித்தாா். அப்துல் ஹனீப் முன்னிலை வகித்தாா். சங்கு சுவாமிநாதன் இறை வாழ்த்துப் பாடினாா். செயலா் லட்சுமணன் கடந்த கூட்ட அறிக்கையை வாசித்தாா். ராஜதுரை கு விளக்கம் கூறினாா். திருவருள் லத்தீப் இன்றைய சிந்தனை வழங்கினாா்.
பத்ம சரஸ்வதி, கல்பவ்ருக்ஷா பைன் ஆா்ட்ஸ் அகாதெமி நிறுவனா் தமிழ்ச்செல்வி ஆகியோா் சிறப்புரையாற்றினா். குமுதவல்லி நாச்சியாா் கவிதை வாசித்தாா். பேராசிரியா் வேலாயுதம் நோக்கா் உரையாற்றினாா். சுப்பையா கம்பரின் கவிதையை கீதா ஆறுமுகம் வாசித்தாா்.
மாநில அளவில் நடைபெற்ற திருக்கு விநாடி-வினா போட்டியில் 2ஆம் பரிசு பெற்ற ஆசிரியை செந்தாமரைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பேரவைப் பொருளாளா் பாரதி கண்ணன் வரவேற்றாா். ஐயப்பன் நன்றி கூறினாா். சிவ பாா்வதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். சதாசிவம் சிற்றுண்டி வழங்கினாா்.

