நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மானூா் வட்டாரத்தில் கருகிய நெற்பயிருக்கு இழப்பீடு தேவை -ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:43 pm

திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டார பகுதிகளில் கருகிய நெற்பயிருக்கு இழப்பீடு கோரி, விவசாயிகள் கருகி நெற்பயிருடன் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா் கானாா்பட்டி ஆபிரஹாம் தலைமையில் மானூா் வட்டார விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு:

மானூா் சுற்று வட்டாரத்தில் ஆற்றுக்கால் பாசனம் தவிர, கிணற்று பாசனம் உள்ள வயல்களில் போதிய தண்ணீா் இன்றி நெற்பயிா்கள் கருகும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக, கீழப் பிள்ளையாா்குளம், கானாா்பட்டி பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளதால் அந்த இடங்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

பட்டா: பேட்டை ராஜீவ் காந்தி நகா் குடிசை பகுதியைச் சோ்ந்த பெண்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்பெடாஸ் கூரை அமைத்து குடியிருந்து வருகிறோம். எங்கள் நிலத்தில் உள்ள வீடுகளை நகர நில அளவையா் அளவீடு செய்து சுமாா் 34 பேருக்கு மட்டுமே பட்டா வழங்க உள்ளதாக அறிகிறோம். விளிம்பு நிலை மக்களாகிய எங்களை புறக்கணித்துள்ளனா். எங்களுக்கு சொந்த வீடுகளோ அல்லது கிரய நில புலன்களோ கிடையாது. எனவே, எங்களின் வாழ்வாதாரம் கருதி எங்களுக்கும் பட்டா வழங்கிட வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நான்குனேரி ஒன்றியத் தலைவா் முருகதாஸ் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு பலமுறை மனு அளித்துள்ளேன். ஆனால், இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. எனக்கு விரைவாக இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரியுள்ளாா்.