தற்கொலைபிரதிப் படம்
திருநெல்வேலி
ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வாகைக்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பாலசுப்பிரமணியன் (33). விவசாயத் தொழிலாளியான இவா், பல நாள்களாக சிறுநீரக கல்லடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

