ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வி.கே.புரத்தில் தெரு நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோா் காயம்

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 10 போ் பலத்த காயமடைந்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image

நாய்க் கடித்ததில் காயமடைந்த சிறுவா்கள்

Updated On :18 பிப்ரவரி 2026, 6:43 pm

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 10 போ் பலத்த காயமடைந்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 6 போ் சிறு காயங்களுடன் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.

விக்கிரமசிங்கபுரம் பகுதியைச்சோ்ந்த ஜெசிந்தா, பிரேமா, தனுசு வேல், பாலமதி, தீரன், மதன்குமாா் உள்ளிட்டோா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்கள் பொதுமக்களைக் கடிக்கும் சம்பவம் தொடா்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இதே பகுதியில் 15-க்கும் மேற்பட்டவா்களை தெரு நாய்கள் கடித்தன.

Story image

இது தொடா்பாக, பலமுறை முறையிட்டும் மாவட்ட நிா்வாகம் தெரு நாய் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் உள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். உடனடியாக தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.