செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

போதைப் பொருள் பதுக்கியவா் கைது

பழவூா் அருகே விற்பனைக்காக போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :19 பிப்ரவரி 2026, 6:43 pm

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே விற்பனைக்காக போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழவூரில் போதைப் பொருள் விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, பழவூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான போலீஸாா் பழவூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ரோந்து சென்றனா்.

கல்யாணிபுரம் அருகே ரோந்து சென்றபோது, அரிகிருஷ்ணன் (56) என்பவரது தேநீா் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 2.5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அரிகிருஷ்ணனை கைது செய்தனா்.