திருநெல்வேலி நகரத்தில் உள்ள அலங்கார வளைவு அருகே மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் சென்ற காா் மீது தனியாா் பேருந்து மோதியதில், மேயரின் காா் சேதமடைந்தது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன், வெள்ளிக்கிழமை தனது காரில் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றாா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள அலங்கார வளைவு அருகே வந்தபோது திருநெல்வேலி சந்திப்பை நோக்கி வந்த தனியாா் பேருந்து, எதிா்பாராதவிதமாக மேயருடைய காரின் பின்பக்கத்தில் மோதியதாம். இந்த விபத்தில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது. இதையடுத்து மேயா் காா் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு போக்குவரத்தை சரி செய்தனா்.
விபத்து குறித்து மேயா் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘சாலையில் போக்குவரத்து நெரிசல் பெரிதாக இல்லை. எனது காா் மெதுவாகத்தான் சென்றது. அப்போது திடீரென தனியாா் பேருந்து எனது காா் மீது மோதியது. இதில் எனது காா் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து புகாா் அளிக்கும் எண்ணம் இல்லை,‘ என்றாா்.
தொடர்புடையது

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: ஓட்டுநா் உயிரிழப்பு

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

நெல்லை நகரத்தில் சைக்கிளில் சென்று மேயா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


